Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக கவர்னர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று

ஜுலை 23, 2020 07:59

சென்னை : தமிழக கவர்னர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில் 147 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் 4 போலீசார், தீயணைப்பு வீரர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்